ஈரான் ஜனாதிபதியின் மறைவையொட்டி கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் பிரார்த்தனை! (photos)

Date:

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற அனுதாப நிகழ்வின் போது இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ் கண்ணீருடன் பிரார்த்தனை செய்தார்.

மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் அப்துல்லாஹியான் உட்பட உயரதிகாரிகளுக்கான பிரார்த்தனை நிகழ்வொன்று கொள்ளுப்பிட்டி ஜூம்ஆ பள்ளிவாசலில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

வெளிவிவகார அமைச்சும் ஈரான் தூதுவராலயமும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய,  ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ்,  தூதுவராலய அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம் பௌசி, முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், விஷேட பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

(photos: dailymirror)

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...