இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் ஒரே இரவில் 24 பேர் பலி

Date:

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஒரே இரவில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு மற்றும் மத்திய காசாவில் குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசா நகரின் மையத்தில் அமையப்பெற்றுள்ள குடியிருப்பு பகுதியில் நேற்றுமுன் தினமும் இஸ்ரேலிய இராணுவம் ஷெல் தாக்குதல் மேற்கொண்டது.

இதன்போது 10 குழந்தைகள் உட்பட 16 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் நேற்று வியாழக்கிழமை மத்திய காசா பகுதியில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் வீடொன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சுமார் 08 பேர் உயிரிழந்தனர்.

தீவிரவாதிகளை இலக்கு வைத்து காசா பகுதி முழுவதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரேலிய பாதுகாப்பு படை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...