ஈரானிய மக்களின் துயரத்தில் நாமும் பங்குகொள்கிறோம்: Amazon college நிறுவனர் இரங்கல்

Date:

ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி ஹெலிகப்டர் விபத்தில் மரணமானதையடுத்து இலங்கையில் அமைந்துள்ள ஈரான் துாதுவரலாயத்திற்கு அரசியல்,மத,சமூக பிரதிநிதிகள் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள அனுதாப ஏட்டில் தமது கவலையினை ஈரான் அரசுக்கும்,நாட்டு மக்களுக்கும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமேசன் கல்வி நிலையத்தின் ( Amazon College and Amazon Compus) நிறைவேற்று பணிப்பாளரும், சமூக சேவையாளருமான கலாநிதி இல்ஹாம் மரைக்கார், அனுதாப பதிவேட்டில் மர்ஹூம் இப்றாஹிம் ரைசியின் துணிச்சலான தீர்மானங்கள் தொடர்பில் பதிவிட்டார்.

மேலும் ஈரானின் பதில் ஜனாதிபதியாக நியமனம் பெற்றுள்ள கலாநிதி மொஹமட் முக்பர் அவர்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன்,ஈரான் நாட்டு மக்களும் அரசாங்கமும் தற்போது எதிர்கொண்டுள்ள கவலையான தருணத்தில் இலங்கையர்களும் அவர்களுடன் இணைந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது இலங்கைக்கான ஈரான் நாட்டின் துாதுவர் டாக்டர்.அலி ரீசா டெல்கோஷ் ( Dr.Alireza Delkhosh) அவர்களை சந்தித்து, இது தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் பகிர்ந்து கொண்டார்.

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...