பாடசாலைகளில் காணப்படும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பெரிய மரங்களை வெட்ட உத்தரவு: புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத்!

Date:

புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் காணப்படும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பெரிய மரங்களை வெட்டி அகற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத் , வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக அறிவித்துள்ளார்.

மழை மற்றும் கடும் காற்றுடனான வானிலையினால் புத்தளம் மாவட்டத்தில் மரங்கள் முறிந்து விழும் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், அதனை தடுக்கும் வகையில் இந்த அறிவுறுத்தல்களை அவர் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பிரதேச செயலாளர்களின் கவனத்திற்கு கொண்டுவருமாறும் அவர் கேட்டுள்ளார்.

இவ்வாறு பாரிய மரங்களை வெட்டி அகற்றுவதற்கு தேவையான நிதியை மாவட்ட செயலகம் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த புத்தளம் மாவட்ட செயலாளர், அதுதொடர்பில் குறித்த மரங்களை அகற்ற தேவையான மதிப்பீட்டு அறிக்கையை பிரதேச செயலாளரிடம் கையளிக்குமாறும் புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத் மேலும் கேட்டுள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...