கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது குறித்து வெளியான அறிவிப்பு

Date:

2023 (2024) ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு (National Colleges of Education) மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு கல்வி அமைச்சு (Ministry of Education) தீர்மானித்துள்ளது.

அதன்படி நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

மூன்று வருடகால சேவை முன் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியைப் பயிலுவதற்காக மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

2021 ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டு க.பொ.த. உயர் தரப் பெறுபேற்றின் (G.C.E A/L) அடிப்படையில் பயிலுநர்களின் இரு தொகுதியினர் ஒரே தடவையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.

மேற்படி ஆட்சேர்ப்புக்குரியதான பாடநெறிகளுக்கான தகைமைகளைப் பரிசோதிப்பதற்கான நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ள விண்ணப்பதாரர்களது பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பெயர் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டு நேர்முகப் பரீட்சைக்கு தோற்றுவதானது தேசிய கல்வியியல் கல்லூரிக்கு அனுமதிபெறுவதற்கான தகைமையல்ல என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...