யுத்த சூழ்நிலையிலும் ஹஜ் செய்யும் ஆர்வத்தை கைவிடாத காசா சிறுவர்கள்!

Date:

கடந்த 8 மாதங்களாக மனிதாபிமானமற்ற யுத்தம் திணிக்கப்பட்ட நிலையில் பல தொந்தரவுகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகியிருந்த பலஸ்தீனிய காசா மக்கள் குறிப்பாக அவர்களுடைய சிறுவர்கள் யுத்த சூழ்நிலையிலும் கூட அவர்களுடைய பல நல்ல உணர்வுகளை வெளிப்படுத்துவதை அடிக்கடி ஊடகங்களில் காணக் கூடியதாக உள்ளது.

அந்தவகையில் இந்நாட்களில் பல இலட்சம் பேர் மக்காவுக்குச் சென்று அவர்களுடைய ஹஜ் கடமையினை நிறைவேற்றி வருகின்ற நிலையில் அந்த புனிதமான இடத்துக்கு செல்ல முடியாத அந்த உணர்வை வெளிப்படுத்தும் வகையில் காசா சிறுவர்கள் ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதைப்போல் ஒரு நிகழ்விலே கலந்துகொள்கின்ற காட்சி மிக நெகிழ்வாக உள்ளது.

இது தொடர்பில் ஏற்பாட்டாளர்கள் கூறுகையில்,

பாதிக்கப்பட்ட காசா சிறுவர்கள் ஹஜ் சடங்கு பற்றிய மத அறிவை பரப்புவதையும்  நடந்து கொண்டிருக்கும் போருக்கு மத்தியில் குழந்தைகளை உற்சாகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இதனை ஏற்பாடு செய்ததாகவும் ஹஜ்ஜின் படிநிலைகள் மற்றும் சடங்குகளை ஆரம்பம் முதல் இறுதி வரை குழந்தைகளுக்குக் காட்டி  அவர்களை மகிழ்ச்சியடையச் செய்து  அவர்களின் முகத்தில் புன்னகையை ஏற்படுத்த விளைகின்றோம் எனவும் கூறினர்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...