68 வயதான அக்கரைப்பற்று ஹாஜி மாரடைப்பால் மக்காவில் மரணம்!

Date:

இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவிற்கு சென்ற இலங்கை ஹஜ் யாத்திரிகர் அல்ஹாஜ் ஆதம் லெப்பை அப்துல் கஃபூர் அவர்கள் (68) மாரடைப்பு காரணமாக மக்காவில் உயிரிழந்துள்ளதாக இலங்கை முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹாதீ ட்ரவல்ஸ் நிறுவனத்தின் ஊடாக ஹஜ் யாத்திரை மேற்கொண்ட இவர் முஸ்லிம் மத்திய கல்லூரி வீதி, அக்கரைப்பற்று-6ஐ சேர்ந்தவராவர்.

அவரது ஜனாஸா புனித மக்காவின் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் உள்ளது.

அரஃபா மினாவில் நிறைவேற்றப்பட வேண்டிய ஹஜ் கடமைகளை பூர்த்தி செய்த பின்னர், இறுதியாக ஹஜ்ஜுடைய தவாஃபுக்காக வேண்டி மக்கா திரும்பிய நிலையிலே இவருடைய திடீர் மரணம் சம்பவித்துள்ளது.

ஹஜ் கமிட்டி, முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களம், ஜெட்டாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் மற்றும் ஹாதீ  டிராவல்ஸ் நிறுவனம் புனித மக்கா நகரில் ஜனாஸாவை அடக்கம் செய்ய தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றன.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...