சர்வ ஜன பலய கூட்டணியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர்: பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பம்

Date:

விமல் வீரவன்சவை மையப்படுத்திய சர்வ ஜன பலய கூட்டணி ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத்தை முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை முன்வைப்பதாகவும் மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

காலி மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இடதுசாரி தேசியவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை மக்களின் முதன்மையான மாற்றமாக ‘சர்வ ஜன பலய’ கூட்டணி உருவெடுத்துள்ளது என அவர் தெரிவித்தார்.

இடதுசாரி தேசியவாதத்தை ஆதரிக்கும் ஒரே அரசியல் குழு தனது கூட்டணி என்று கூறிய அவர், மற்ற அனைத்து கட்சிகளும் வலதுசாரி என்ற பதாகையின் கீழ் ஒன்றுபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க ஆகிய அனைவரும் அதனை கடைப்பிடிப்பதாகவும், தமது கூட்டணி மக்களுக்கு தனித்துவமான மாற்றீட்டை வழங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அரசியல் பிரச்சாரங்களை விரைவில் ஆரம்பிக்க சர்வ ஜன பலய கூட்டணி தயாராக இருப்பதாகவும், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் பெயரிடப்படுவார் எனவும் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...