நாளை அதிபர் – ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

Date:

தமது பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வைக் கோரி நாளை (02) பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளன.

ஜனாதிபதியின் அச்சுறுத்தலுக்கு எதிராக இந்தப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கறுப்புக்கொடி மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொழிற்சங்க நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்திய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர், பெற்றோர்கள் நிலைமையை புரிந்து கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) அனைத்து அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்து அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒடுக்கும் வழிமுறைகளை கண்டிப்பதாகவும், என்ன நடந்தாலும் தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடருமெனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...