நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று செவ்வாய்க்கிழமை (02)நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதியின் விசேட உரைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு நேற்று திங்கட்கிழமை (01) பிற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

ஜனாதிபதி ஆற்றவுள்ள உரை தொடர்பான விவாதமொன்றை கோர எதிர்க்கட்சிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் இன்று நடைபெறவிருந்த இதனுடன் தொடர்புடைய பிரேரணை குறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பை நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்கத்தால் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைகள் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...