நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று செவ்வாய்க்கிழமை (02)நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதியின் விசேட உரைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு நேற்று திங்கட்கிழமை (01) பிற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

ஜனாதிபதி ஆற்றவுள்ள உரை தொடர்பான விவாதமொன்றை கோர எதிர்க்கட்சிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் இன்று நடைபெறவிருந்த இதனுடன் தொடர்புடைய பிரேரணை குறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பை நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்கத்தால் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைகள் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...