ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனு ஒத்திவைப்பு!

Date:

மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனு கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு ஆட்சேபனை மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

இந்த பிணை கோரிக்கை இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

ஹிருணிகா பிரேமச்சந்திரவின் தரப்பில் முன்னிலையான சட்டத்திரணியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க சட்டமா அதிபர் எதிர்பார்ப்பதாக அரசாங்க சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.

அத்துடன் எழுத்து மூலம் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்காக குறித்த வழக்கை ஒத்திவைக்குமாறும் அரசாங்க சட்டத்தரணி மன்றில் கோரிக்கை முன்வைத்தார்.

இதன்படி, சட்டமா அதிபருக்கு ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க அனுமதித்த உயர் நீதிமன்ற நீதிபதி, பிணை கோரிக்கையை எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறும் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...