பங்களாதேஷில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் கரிசணை!

Date:

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள வன்முறைகள் பாரியளவில் வியாபித்துள்ளதால்,அமைதியைக் கொண்டுவருவதற்கு உரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மக்களின் உயிர்களையும் அரசாங்க உடமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தலைநகர் டாக்காவில் சிக்குண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இணைய மற்றும் தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைநகர் டாக்கா மற்றும் சிட்டகொங்கில் பல்கலைகழகங்களில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு கோரி, பங்களாதேஷிற்கான இலங்கை தூதுவர் தர்மபால வீரக்கொடி கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.

மாணவர்களின் பெற்றோர்களுடன் தூதுவர் தொடர்ந்தும் தொடர்புகளை பேணி வருவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...