இஸ்மாயில் ஹனியேவின் இறுதி ஊர்வலம் தெஹ்ரானில் ஆரம்பம்: கத்தாரில் நல்லடக்கம்

Date:

படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலரின் இறுதிச் சடங்குகள் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தலைமையில் தெஹ்ரானில் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில், தொழுகைக்கு பின்னர் தெருக்களில் பொது மக்கள் அணிவகுத்து நின்று அவரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

இந்த கொலைக்கு இஸ்ரேலை பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்துள்ளதால், மத்திய கிழக்கு முழுவதும் போர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குக்குப் பிறகு இஸ்மாயில் ஹனியேவின் உடல் கத்தாரின் தலைநகரான தோஹாவிற்கு எடுத்துச்செல்லப்பட்டு பிரார்த்தனையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளதுடன் ஈரானில் மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படவுள்ளது.

ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் இறுதி ஊர்வலத்தில் உரையாற்றுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...