ஆளும் கட்சிக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை:எதிர்க்கட்சிகள் தீர்மானம்

Date:

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற பெரும்பான்மையை சவாலுக்குட்படுத்தும் வகையில், நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவது தொடர்பில், எதிர்க்கட்சிகளிடையே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் (06) செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளன.

இதனை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில், பாராளுமன்றத்தில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையை சவாலுக்குட்படுத்தும் வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர, எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

“ஆளும் கட்சிக்கு 113 என்ற பெரும்பான்மை இல்லை” என்ற காரணத்தை அடிப்படையாகக் கொண்டே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

ஆளும் கூட்டணிக் கட்சிகளின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.

ஆனால், “ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை” என்று, பொதுஜன பெரமுன உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம், குறித்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன தனித்து வேட்பாளரை நிறுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதுடன், அந்த வேட்பாளரை (07) புதன்கிழமை அறிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கோ அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்காது என்பது, எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பாகும்.

இந்த உண்மை நிலைமையை, நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தவும், பாராளுமன்றத்துக்குள் அரசாங்கத்திற்கு நெருக்கடியான நிலைமையைத் தோற்றுவிக்கும் வகையிலேயே, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் இறுதியாக இடம்பெற்ற ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தின் பின்னர், பொதுஜன பெரமுனவின் 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பின் பிரகாரம், “ஆளும் கட்சிக்கு 113 என்ற பெரும்பான்மை இல்லை” என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

( ஐ.ஏ. காதிர் கான்)

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...