அரச ஓய்வூதியர்களுக்கான விசேட கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

Date:

அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் மூவாயிரம் ரூபா விசேட இடைக்கால கொடுப்பனவை வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீளப் பெறுமாறு அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள போதிலும் அந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த 24ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவையின் விசேட கூட்டத்தில் தற்போது வழங்கப்படும் 2500 ரூபாவுக்கு மேலதிகமாக இடைக்கால கொடுப்பனவாக 5500 ரூபாவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரச ஊதிய முரண்பாடுகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிசீலனையைத் தொடர்ந்து இந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், தேர்தல் முடியும் வரை கொடுப்பனவு வழங்க வேண்டாம் என நேற்று (07) அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

எனினும், அந்த வேலைத்திட்டங்கள் சட்டவிரோதமானவை அல்ல என்பதால், அவற்றை நிறுத்துமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு தாம் அறிவுறுத்தும் நிலையில் இல்லை என சமன் ஏக்கநாயக்க, தேர்தல் ஆணையத் தவிசாளரின் கடிதத்திற்கு பதிலளித்துள்ளார்.

இதன் படி, அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின் படி ஓய்வூதிய கொடுப்பனவை வழங்க வேண்டாம் என தேர்தல் ஆணையம் நேற்று அனைத்து அமைச்சு அதிகாரிகளையும் வரவழைத்து அறிவித்துள்ளது.

இவ்வாறு அறிவிக்கப்பட்ட போதிலும், அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன அமைச்சரவையின் முடிவின் படி கொடுப்பனவை வழங்குமாறு இது தொடர்பான சுற்றறிக்கையை நேற்று (07) அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...