ஹமாஸ் தலைவர் மீதான மலேசிய பிரதமரின் பதிவுகளை நீக்கியதற்கு மெட்டா மன்னிப்பு கோரியது

Date:

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ( Ismail Haniyeh ) கடந்த வாரம் கொல்லப்பட்டது தொடர்பான மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் இருந்த பதிவுகள் நீக்கப்பட்டதற்கு Meta  மன்னிப்புக் கோரியுள்ளது.

இஸ்மாயில் ஹனியே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் பதிவுகள் நீக்கப்பட்டதை அடுத்து Meta-விடம் மலேசியா விளக்கம் கேட்டிருந்தது.

பிரதமரின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்த உள்ளடக்கம் அகற்றப்பட்டு, சரியான செய்தி மதிப்புள்ள லேபிளுடன் உள்ளடக்கம் மீண்டும் இடம்பெற்றுள்ளதாக Meta செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ்ஸிடம் எழுப்பிய கேள்விகளுக்கு மின்னஞ்சல் மூலம் பதிலளித்தார்.

மலேசியா தொடர்பு அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலக உறுப்பினர்கள் திங்களன்று Meta பிரதிநிதிகளை சந்தித்து விளக்கம் கேட்டிருந்தனர்.

Meta -வின் செயல்கள் பாராபட்சமானது, அநீதியானது மற்றும் கருத்துச் சுதந்திரத்தை அப்பட்டமாக நசுக்குவதாகக் கருதுகிறது என்று பிரதமர் அலுவலகம் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...