உறவுகளை பலப்படுத்துவதற்காக அமைச்சர் அலி சப்ரி எகிப்து விஜயம்

Date:

 வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி  மூன்று நாள் பயணமாக எகிப்துக்கு  விஜயம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று 07ஆம் திகதி முதல் 09 ஆம் திகதிவரை அமைச்சர் அலி சப்ரி எகிப்தில் தங்கியிருப்பார்.

இப்பயணத்தின் போது, கெய்ரோவில் உள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், எகிப்தின் முதலீடு மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சரையும் சந்திக்கவுள்ளார்.

அமைச்சர் அலி சப்ரி இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் எகிப்திய வர்த்தக சம்மேளன கூட்டமைப்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன் பல முக்கியஸ்தர்களையும் சந்திக்கவுள்ளார்.

இந்த இருதரப்பு பயணமானது இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...