ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற வெற்றிடம்: நியமிக்கப்படவுள்ள கட்சி உறுப்பினர்

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு பந்துலால் பண்டாரிகொட  நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய இருவரினதும் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் நேற்று (09) தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், மனுஷ நாணயக்காரவின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டதை தொடர்ந்து வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பந்துலால் பண்டாரிகொடவை நியமிக்க தீர்மானம் எட்டப்படவுள்ளது.

2020 பொதுத் தேர்தலில் காலி (Galle) மாவட்டத்தில் 34,897 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்ற பண்டாரிகொட, ஐக்கிய மக்கள் சக்தியின் விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளார்.

இதேவேளை, ஹரின் பெர்னாண்டோவினால் (Harin Fernando) வெற்றிடமாகவுள்ள ஆசனத்தை நிரப்புவதற்கான உறுப்பினர் தொடர்பில்  இன்னும் தீர்மானிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...