தேர்தல் ஆணைக்குழுவின் போலி இணையத்தளம்: அதிகரிக்கும் முறைப்பாடுகள்

Date:

தேர்தல் சட்டவிதிகளை மீறியமை தொடர்பாக 8 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறியமை தொடர்பாக 3 முறைப்பாடுகளும் தேர்தல் வன்முறை தொடர்பாக 5 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

அத்துடன்  ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பெப்ரல் அமைப்புக்கு இதுவரை 68க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை தேர்தல் ஆணைக்குழுவின் இணையதளத்தைப் போன்று  உருவாக்கப்பட்டுள்ள போலியான இணையதளம் தொடர்பாக விசாரணை  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணினி அவசரபிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விடயம்  தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கணினி அவசரபிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுணகல குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 269 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் 186 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் 80 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதில், தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 266 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...