தேர்தல் ஆணைக்குழுவின் போலி இணையத்தளம்: அதிகரிக்கும் முறைப்பாடுகள்

Date:

தேர்தல் சட்டவிதிகளை மீறியமை தொடர்பாக 8 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறியமை தொடர்பாக 3 முறைப்பாடுகளும் தேர்தல் வன்முறை தொடர்பாக 5 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

அத்துடன்  ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பெப்ரல் அமைப்புக்கு இதுவரை 68க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை தேர்தல் ஆணைக்குழுவின் இணையதளத்தைப் போன்று  உருவாக்கப்பட்டுள்ள போலியான இணையதளம் தொடர்பாக விசாரணை  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணினி அவசரபிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விடயம்  தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கணினி அவசரபிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுணகல குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 269 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் 186 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் 80 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதில், தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 266 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...