ஈரானின் அச்சுறுத்தல்: அமெரிக்க நேச நாடுகள் யுத்த நிறுத்தத்தில் தீவிரம்; இணங்க மறுக்கும் ஹமாஸ்!

Date:

இஸ்ரேலைத் தாக்குவதாக ஈரான் அச்சுறுத்தல் விடுத்து வரும் நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு மத்தியில் யுத்த நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இது தொடர்பில் இந்த ஐந்து நாடுகளினதும் தலைவர்கள் இணைந்து திங்களன்று (12) வெளியிட்ட அறிக்கையில்,

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களான நாங்கள் மத்திய கிழக்கின் நிலைமை குறித்து விவாதித்தோம்.

பதட்டங்களைத் தணிக்கவும், காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகலாய் விடுதலை செய்யும் ஒப்பந்தத்தை எட்டவும் நடந்து வரும் முயற்சிகளுக்கு எங்களது முழு ஆதரவையும் தெரிவித்தோம். ஜனாதிபதி பைடென், எகிப்தின் ஜனாதிபதி சிசி மற்றும் கத்தாரின் அமீர் தமீம் ஆகியோரின் கூட்டு அழைப்பை இந்த வாரத்தின் பிற்பகுதியில் புதுப்பிக்கும் வகையில், ஒப்பந்தத்தை விரைவில் முடிப்பதற்கான நோக்கத்துடன் நாங்கள் ஒப்புதல் அளித்தோம், இனி இழப்பதற்கு நேரமில்லை என்பதை வலியுறுத்தினோம்.

அனைத்து தரப்பினரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். கூடுதலாக, நிவாரணங்களும் உதவிகளும் தடையின்றி விநியோகிக்கப்பட வேண்டும்.

ஈரானிய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்களுக்கு எதிராகவும் இஸ்ரேலைப் பாதுகாப்பதற்கு நாங்கள் எங்கள் ஆதரவை தெரிவித்தோம்.

இஸ்ரேலுக்கு எதிரான இராணுவத் தாக்குதலுக்கு ஈரானின் தற்போதைய அச்சுறுத்தல்களை நிறுத்துமாறு நாங்கள் அழைப்பு விடுத்ததோடு அத்தகைய தாக்குதலினால் வரும் பிராந்திய பாதுகாப்பிற்கான கடுமையான விளைவுகள் குறித்தும் விவாதித்தோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை இழுபறியில் இருக்கும் காசா போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை கத்தார் முன்னின்று நடத்தவுள்ளது.இது ஈரான் இஸ்ரேலைத் தாக்குவதைத் தடுக்கும் எனவும் ஒரு பரந்த போரைத் தவிர்க்கும் எனவும் அமெரிக்கா நம்புகிறது.

முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 40,000 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சு கூறியுள்ள சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்திய மத்தியஸ்தர்கள் இஸ்ரேல் மற்றும் ஹமாஸை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் டஜன் கணக்கான மக்களைக் கொன்ற கான் யூனிஸ் மற்றும் காசா நகர குடியிருப்பு கட்டிடங்கள் மீது இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்த நிலையிலேயே இந்தப் பேச்சுவார்த்தை முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேல் கலந்து கொள்வதை உறுதி செய்த போதும் ஹமாஸ் இதில் கலந்து கொள்ள மறுத்திருக்கிறது.

Popular

More like this
Related

“இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே பலத்த கூட்டாளி டிரம்ப் மட்டுமே”: டிரம்ப் – ஈரான் ஒப்பந்தத்தை விமர்சிக்க வேண்டாம் என ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் மேற்கொண்டுள்ள சமாதான ஒப்பந்தத்தைப் பகிரங்கமாக...

லங்கா உப்பு நிறுவனத்தின் பொது முகாமையாளர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

லங்கா உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளர் ரத்நாயக்க முதியன்சலாகே குணரத்ன,...

ஈரான்-அமெரிக்க போர் நிறுத்தத்திற்கு இலங்கை வரவேற்பு!

உடனடி போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கும் ஈரான்   இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை...

‘முஸ்லிம் ஊடகங்கள்’ குறித்த பிரதி அமைச்சர் முனீர் முழப்பரின் கருத்து மிகவும் கண்டனத்துக்குரியது: முஸ்லிம் மீடியா போரம் அறிக்கை

முஸ்லிம் ஊடகங்களைப் பிரதிநிதித்துவம் செய்வோர் இனவாத சக்திகளுக்குத் துணை போவதாக சமய...