#Back to Glory: சமூக ஊடகங்களின் கருத்துக் கணிப்புக்கள் குறித்து அவதானம்!

Date:

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சமூக ஊடகங்கள் கருத்துக் கணிப்புக்கள் வெளியிடுவதைத் தடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் தேசிய தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வாரம் நடைபெறவுள்ள தேர்தல் ஆணைக்குழுக் கூட்டத்திலும் இதுபற்றி கலந்துரையாடப்பட உள்ளது.

இவ்வாறான கருத்துக்கணிப்புக்களால், சில வேட்பாளர்களுக்கு பாதக நிலைமை ஏற்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தக் கணிப்புக்களை மேற்கொள்ளும் தரப்புக்கள் யார் என்பது குறித்து கண்டறியும் நோக்கில், தேர்தல் ஆணைக்குழு ஆய்வு நடத்தியும் வருகிறது.

இந்த ஆய்வின் அடிப்படையில் கருத்துக்கணிப்புக்களை தடை செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்களில் நடத்டதப்படும் கருத்துக் கணிப்புக்களை இரத்து செய்வது இலகுவானது என்ற போதிலும், சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் கருத்துக்கணிப்புக்களை கட்டுப்படுத்துவது சவால் மிக்கது என்றும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...