தேர்தல் செயன்முறைகள் உன்னிப்பாக அவதானிக்கப்படும்: தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

Date:

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணி (EU EOM) ஒன்பது மாகாணங்களிலும் 26 கண்காணிப்பாளர்களை (LTOs) நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் ஒவ்வொரு மாகாணத்திற்கும் சென்று கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என தலைமை கண்காணிப்பாளரும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினருமான நாச்சோ சான்செஸ் அமோர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கண்காணிப்பாளர்கள் தங்கள் கண்களாகவும் காதுகளாகவும் இருக்கப் போகிறார்கள் என்றும் அவர்கள் தேர்தல் செயன்முறையின் ஒவ்வொரு அம்சத்தையும் உன்னிப்பாக அவதானிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் சட்ட நடைமுறை, நிதி, ஊடகம் மற்றும் சமூக ஊடகங்கள், பாதுகாப்பு மற்றும் நடமாட்டம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய 10 நிபுணர்களைக் கொண்ட முக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகத்தை நகரங்களில் மட்டுமல்லாது, சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் கண்காணிப்பாளர்கள் சந்திப்பார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...