2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் கால அட்டவணை வெளியானது..!

Date:

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கால அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன் படி, இரண்டாவது வினாத்தாள் (Part II) செப்டம்பர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்று காலை 11.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரை முதல் வினாத்தாள் பரீட்சை (Part I) நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2,649 பரீட்சை மையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பரீட்சைக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகளின் வருகை பதிவேடு அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுவரை ஆவணங்கள் கிடைக்காத அதிபர்கள் www.doenets.lk அல்லது https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்திற்குச் சென்று ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...