திறப்பு விழா நாடாவை வெட்ட முடியாமல் திணறிய மன்னர் சார்ள்ஸ்

Date:

ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற ஒரு மலர் கண்காட்சியில் பிரதம அதிதியாக இங்கிலாந்தின் 3ஆவது சார்ள்ஸ் மன்னர் கலந்து கொண்டிருந்தார்.

பூக்களுக்கான கண்காட்சி வைபவத்தை திறந்து வைப்பதற்காக திறப்பு நாடாவை வெட்டுவது ஒவ்வொரு விழாக்களில் வழக்கமாகும்.

அந்தவகையில் ஸ்கொட்லாந்தில் நடைபெறும் 200வது ஆண்டு கோடைகால மலர் கண்காட்சிக்கு சார்லஸ் தனியாக விஜயம் செய்தார்.

இதன்போது இந்த கண்காட்சியில் நாடாவை வெட்டுவதற்காக மன்னருக்கு கத்திரிக்கோல் வழங்கப்பட்ட போது வெட்டமுடியாமல் திணறும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாகியுள்ளது.

இந்த வீடியோவில் சார்ள்ஸ்  மன்னர் நாடாவை வெட்டுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்வதையும் இறுதியாக நாடாவை வெட்டி திறப்பு விழாவை ஆரம்பித்து வைத்ததையும் அதனை பார்த்த கொண்டிருந்த மக்கள ரசித்து சிரிப்பதையும் இந்த வீடியோ காட்டுகின்றது.

என்னதான் உலகத்தில் உயர்ந்த மனிதர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் கூட அடிசறுக்கின்ற சந்தர்ப்பங்கள் வரத்தானே செய்யும்.

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...