புதிய அரசியல் கூட்டணி அங்குரார்ப்பணம்; 10 அரசியல் கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Date:

பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் பெயரில் புதிய அரசியல் கூட்டணியொன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வியாழக்கிழைமை கொழும்பு பத்தரமுல்லை வோட்டர்ச் ஹேஜ்ஜில் (Water’s Edge) இடம்பெற்றது.

இப்புதிய அரசியல் கூட்டணி “கிண்ணம்” சின்னத்தில் பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைவராக தெரிவாகியுள்ளதோடு, குறித்த கட்சியின் செயலாளராக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 10 அரசியல் கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...