ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Date:

அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் பரீட்சைகள் திணைக்களம்  முக்கிய கோரிக்கையொன்றை விடுத்துள்ளது.

அதாவது, செப்டம்பர் 15 ஆம் திகதி 9.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை  கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒலிபெருக்கி மூலம் நடத்தப்படும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 15ஆம் திகதி காலை புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

மேலும், 3,23,879 பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...