30 இலட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களிக்க முடியாத நிலை: தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றச்சாட்டு

Date:

வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் கைதிகளின் வாக்களிப்புக்கு தேவையான சட்டம் வழங்கப்படாமையால் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் 30 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதற்கு சட்டமன்ற அமைப்பான நாடாளுமன்றமே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இது நாட்டின் கணிசமான சதவீத மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.

வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் கைதிகளின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான சட்டத்தில் நாடாளுமன்றமோ அல்லது அதிகாரிகளோ அக்கறை காட்டவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இது தொடர்பான விசாரணையின் போது தெரிவித்தார்.

கைதிகள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகள் தேர்தல் தினத்தில் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான சட்ட சீர்திருத்தங்களுக்கு தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இலங்கை விடயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்குள் நடைபெறும் எனவும் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...