நாளை 350 சிறைக் கைதிகளுக்கு அரச மன்னிப்பு

Date:

கைதிகள் தினத்தை முன்னிட்டு விசேட அரச மன்னிப்பின் கீழ் 350 சிறைக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் விசேட அரச மன்னிப்பு வழங்கப்படுமென சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பீ.திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

இதன்படி நாளை, சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, உரிய நிபந்தனைகளுக்கு அமைய தகுதி பெற்ற 350 கைதிகள் நாளை விடுதலை செய்யப்படவுள்ளனர்.

இதேவேளை, கைதிகள் தினத்தை முன்னிட்டு, கைதிகளை வெளிப்படையாகப் பார்ப்பதற்கு விசேட வாய்ப்பு அல்லது திறந்தவெளிச் சந்தர்ப்பம் வழங்கவும் சிறைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...