சமூக நீதிக் கட்சியின் தவிசாளர், அங்கத்தவர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து விலகுவதாக சிராஜ் மஷ்ஹூர் அறிவிப்பு

Date:

சமூக நீதிக் கட்சியின் தவிசாளர் மற்றும் அங்கத்தவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் இராஜினாமா செய்துள்ளதாக சிராஜ் மஷ்ஹூர் அறிவித்துள்ளார்.

சமூக நீதிக் கட்சியின் தலைவர் நஜா மொஹமட் அவர்களிடம் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முன் சமூக நீதிக்கட்சி, தேசிய மக்கள் சக்திக்கு வழங்கியிருந்த ஆதரவை வாபஸ் பெற்றிருந்த நிலையில் அதற்கு பின்னர் தேசிய மக்கள் சக்திக்கு சார்பான பதிவுகளையும் பேஸ்புக் தளத்தில்  பதிவிட்டு வந்தநிலையிலே தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

இதற்கு முன்னர் தேசிய சூறா சபையின் தலைவரும் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினுடைய கூட்டமொன்றின் மேடையில் ஏறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையால் அவரும் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...