நெருங்கும் ஜனாதிபதி தேர்தல்: நாட்டிற்கு வருகைத்தந்த சர்வதேச கண்காணிப்பாளர்கள்!

Date:

ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக 100க்கும் மேற்பட்ட சர்வதேச கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் ஏற்கனவே சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சேர்ந்த 71 பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் (EU) சேர்ந்த 43 பேர், பொதுநலவாய நாடுகளை (Commonwealth) சேர்ந்த 22 பேர் மற்றும் தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பிலிருந்து (ANFREL) 6 பேரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் எதிர்வரும் நாட்களில், 34 ஐரோப்பிய ஒன்றிய பார்வையாளர்கள் மற்றும் தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பிலிருந்து 3 பிரதிநிதிகளும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அருகில் அமைந்துள்ள நாடுகளைச் சேர்ந்த 7 பேரும் இந்தச் செயற்பாட்டில் மேலும் இணைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, 22 தேர்தல் தொகுதிகளிலும் விரிவான கண்காணிப்பை உறுதி செய்வதற்காக பார்வையாளர் குழுக்கள் தங்களது நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...