பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பள்ளியில் நாளை மீலாத் பரிசளிப்பு விழா..!

Date:

பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளிவாசலின் வருடாந்த மீலாதுன் நபி தின போட்டி நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா நாளை 16ம் திகதி திங்கட்கிழமை காலை 8:00 மணி முதல் பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிவாசலின் செயலாளர் தெரிவித்தார்.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.

இதன்போது பறகஹதெனிய மத்ரசதில் ஜாமி உல் அன்வர், சிங்ஹபுர மத்ரசதுர் ரஹ்மானியா, பண்டாரகல மஸ்ஜிதுன் நூர் ஆகிய குர்ஆன் மதரஸா மாணவர்களின் போட்டி நிகழ்ச்சிகளும் பரிசளிப்பு விழாவும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பசில் ராஜபக்ஷவை கைது செய்ய உத்தரவு!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு மாத்தறை நீதிவான்...

வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கை!

அடுத்த 48 மணி நேரத்தில் களனி ஆற்றுப் படுகையை அண்மித்த (தாழ்வான)...

21 பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்!

டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலகக்...

வாகன இலக்கத் தகடுகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவிப்பு!

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த அச்சிடப்பட்டும் உரிமை கோரப்படாமலும்...