இஸ்ரேல் – லெபனான் போர் தீவிரம்: இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகிய தகவல்

Date:

லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

ஏறக்குறைய 7,600 இலங்கை தொழிலாளர்கள் லெபனானில் பணிபுரிந்து வருவதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் நாட்டின் தென்பகுதிகளில் வசிப்பதாக லெபனான் தூதுவர்  கபில ஜயவீர,  சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாஹ் அமைப்பை குறிவைத்து, நாட்டின் வடக்குப் பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

இதில், சிறுவர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்காணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், உடன் போர் நிறுத்தத்திற்க அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அழைப்பு விடுத்துள்ள போதிலும், இஸ்ரேல் அதனை மறுத்துள்ளது.

இந்நிலையிலேயே, லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையர்கள் மோதல் பிரதேசங்களில் வசிக்கவில்லை என லெபனான் தூதுவர்   சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...