முன்னாள் அமைச்சர்களுக்கு பயன்படுத்திய உத்தியோகபூர்வ அரச வீடுகளை திரும்பப் பெறுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தமது பதவிக்காலத்தில் பயன்படுத்திய அனைத்து அரச வீடுகளை ஒப்படைக்குமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி வரை முன்னாள் எம்.பி.க்கள் மாதிவெல குடியிருப்பைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
மேலும், முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பல நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கிய வீடுகளின் எண்ணிக்கை 50 ஆகும்.
இதேவேளை, உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு மீள பெறப்பட்டுள்ளது.