ஜப்பானின் புதிய பிரதமராக ஷிகெரு இஷிபா பொறுப்பேற்பு

Date:

ஜப்பானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா நாட்டின் புதிய பிரதமராக இன்று (01) பொறுப்பேற்றுள்ளார்.

தொடர் மோசடிக் குற்றச்சாட்டுகளால் பிரதமர் புமியோ கிஷிடா பதவி விலகப்போவதாகக் கடந்த மாதம் அறிவித்திருந்தார். எனவே, கடந்த 27ஆம் திகதி ஜப்பானின் ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சி அதன் தலைமைத்துவத்துக்கான வாக்கெடுப்பை நடத்தியது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை 9 வேட்பாளர்கள் களத்தில் இறங்கினர். இதில் அவர் பொருளாதார பாதுகாப்பு அமைச்சர் சானா டெய்ச்சியுடனான கடுமையாக போட்டியிட்டு, இரண்டாவது சுற்று வாக்கெடுப்புக்குப் பின்னரே கட்சி தலைமைக்கான போட்டியில் வெற்றி பெற்றார்.

அத்தோடு, ஜப்பானில் எதிர்வரும் 2025 ஒக்டோபர் அல்லது அதற்கு முன்னர் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...