கிழக்கு மாகாணத்தில் எய்ட்ஸ் நோய் அதிகரிப்பதை தடுக்க ஆளுநர் விசேட நடவடிக்கை

Date:

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 67 பேருக்கு எயிட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கிடையில், புதிய ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, எயிட்ஸ் நோயை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகளை பணித்துள்ளார்.

மட்டக்களப்பு நகரில் நேற்று நடைபெற்ற மாகாண மட்டத்திலான விசேட கருத்தரங்கில், திருகோணமலை மாவட்டத்தில் 26, அம்பாறையில் 25, மற்றும் மட்டக்களப்பில் 16 பேர் என மொத்தம் 67 பேருக்கான சுகாதார அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கான நடவடிக்கையாக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து, எயிட்ஸ் நோயை ஒழிக்க திட்டமிடல்கள் நடைபெற்று வருகின்றன.

சுகாதாரத் திணைக்களம் மட்டுமன்றி, மற்ற அரசு திணைக்களங்களின் ஒத்துழைப்பும் பெறப்படும் என கருத்தரங்கில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆளுநர் ஜயந்த ரத்னசேகர, “எயிட்ஸ் நோயை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் சுகாதார சேவையாளர்களின் முழு ஒத்துழைப்பும் தேவை” என கருத்து தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கில், வைத்திய அதிகாரிகள், அரசு திணைக்கள தலைவர்கள் மற்றும் தேசிய இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், எதிர்வரும் காலங்களில் கிழக்கு மாகாணத்தின் சுகாதார சேவைகள் மக்களுக்கு முழுமையாக சென்றடைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், புதிய ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...