கிழக்கு மாகாணத்தில் எய்ட்ஸ் நோய் அதிகரிப்பதை தடுக்க ஆளுநர் விசேட நடவடிக்கை

Date:

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 67 பேருக்கு எயிட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கிடையில், புதிய ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, எயிட்ஸ் நோயை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகளை பணித்துள்ளார்.

மட்டக்களப்பு நகரில் நேற்று நடைபெற்ற மாகாண மட்டத்திலான விசேட கருத்தரங்கில், திருகோணமலை மாவட்டத்தில் 26, அம்பாறையில் 25, மற்றும் மட்டக்களப்பில் 16 பேர் என மொத்தம் 67 பேருக்கான சுகாதார அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கான நடவடிக்கையாக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து, எயிட்ஸ் நோயை ஒழிக்க திட்டமிடல்கள் நடைபெற்று வருகின்றன.

சுகாதாரத் திணைக்களம் மட்டுமன்றி, மற்ற அரசு திணைக்களங்களின் ஒத்துழைப்பும் பெறப்படும் என கருத்தரங்கில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆளுநர் ஜயந்த ரத்னசேகர, “எயிட்ஸ் நோயை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் சுகாதார சேவையாளர்களின் முழு ஒத்துழைப்பும் தேவை” என கருத்து தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கில், வைத்திய அதிகாரிகள், அரசு திணைக்கள தலைவர்கள் மற்றும் தேசிய இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், எதிர்வரும் காலங்களில் கிழக்கு மாகாணத்தின் சுகாதார சேவைகள் மக்களுக்கு முழுமையாக சென்றடைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், புதிய ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...