நாளைய தினம் பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Date:

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் நேற்று மற்றும் இன்று மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் தேவையான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை 16 மாவட்டங்களில் 69 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 158, 391 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சீரற்ற காலநிலையால் இதுவரையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 240 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், 1,753 குடும்பங்களைச் சேர்ந்த 9, 663 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...