‘Talk to Chairman’: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிய வேலைத்திட்டம்

Date:

‘வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளைத் தடுக்கவும், பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் விதமாகவும்  ‘தலைவரிடம் சொல்லுங்கள்’ Talk to Chairman ‘ என்ற புதிய திட்டத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகத்தின் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் எனவும்,  வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளை தடுக்க முடியும் எனவும்  இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன்  முறைப்பாடளிப்பவர்கள்  0112 864188 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவும், 0717 593 593 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தினூடாகவும் மற்றும்  talkchairman@slbfe.lk  என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் முறைப்பாடளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  முறைப்பாட்டாளரின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும் எனவும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...