அறுகம்பை பகுதியிலிருந்து இஸ்ரேலியர்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவை வேண்டுகோள்

Date:

இலங்கையின் அறுகம்பை உட்பட தெற்கு மேற்கு கடற்கரை பகுதிகளில் இருந்து தனது பிரஜைகள் உடனடியாக வெளியேறவேண்டும் என இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காணப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் காணப்படும் பகுதிகள் கடற்கரையோரங்களை அடிப்படையாக வைத்து பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக கிடைத்துள்ள புதிய தகவலை தொடர்ந்தே இந்த வேண்டுகோளை விடுப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

எனினும் எவ்வகையான அச்சுறுத்தல் என்பது குறித்து விசேடமாக எதனையும் குறிப்பிடாத இஸ்ரேலிய அரசாங்கம் இலங்கையின் ஏனைய பகுதிகளில் உள்ள இஸ்ரேலியர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பொதுஇடங்களில் பலர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளை நடத்தவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

இஸ்ரேலின் பாதுகாப்பு தரப்பினர் இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர் என இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவை தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் தலைமையில், இலங்கை போக்குவரத்து...

கொழும்பில் ‘முஸ்லிம் நட்பு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் விழிப்புணர்வு கருத்தரங்கு 2026’ !

மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மற்றும் சுற்றுலாத்...

உழ்ஹிய்யா கடமை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முக்கிய வழிகாட்டல்

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, இஸ்லாத்தின் முக்கிய சுன்னத்தான உழ்ஹிய்யா (குர்பானி)  நிறைவேற்றுவது...

ஆண்டுதோறும் 15,000 க்கும் அதிகமான புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்!

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 15,000 முதல் 18,000 வரையிலான புதிய புற்றுநோயாளிகள்...