துருக்கி அங்காராவில் பயங்கரவாத தாக்குதல்: பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

Date:

துருக்கியில் உள்ள பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அங்காராவிற்கு அருகில் உள்ள துருக்கிய ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (TAI) மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது தற்கொலை குண்டுதாரியாக இருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அங்காராவின் மேயர் மன்சூர் யாவாஸ் கூறியதாவது: அங்காராவில் உள்ள TAI வளாகத்தில் நடந்த மோதல் மற்றும் தீவிரவாத தாக்குதலால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்.

‘காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன். பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம்’ என்றார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...