Saudi Agriculture Expo 2024 கண்காட்சி: தென்னைப் பொருட்களை உற்பத்தி செய்யும் 10 இலங்கை நிறுவனங்கள் பங்கேற்பு!

Date:

Saudi Agriculture Expo 2024 கண்காட்சி கடந்த 21 முதல் 24 வரை சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்தக் கண்காட்சியில் தென்னை தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்யும் 10 இலங்கை நிறுவனங்கள் முதல் தடவையாக பங்குபற்றின.

இதன்போது ‘கண்காட்சியில்10 இலங்கை நிறுவனங்களின் முதல் பங்கேற்பை ஏற்பாடு செய்து, திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தென்னைப் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் இலங்கை நிறுவனங்கள் சிறந்த வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் ஓ.எல்.அமீர் அஜ்வத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இக்கண்காட்சிக்கு, மன்னர் அப்துல் அஸீஸின்  நிர்வாகக் குழுத் தலைவரும், சவூதி அரேபியாவின் சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் அமைச்சகத்தின் துணை நிரந்தரச் செயலருமான டாக்டர். ஃபர்ஹான்,  சவூதி அரேபிய வர்த்தக சம்மேளனத்தின் துணைத் தலைவரும் சவூதி NAF குழும நிறுவனங்களின் தலைவருமான அல்ஷெய்கி மற்றும் ஃபயேஸ் அல்-ஷாஹீலி ஆகியோர் ஆகியோர் இலங்கை சார்பான கண்காட்சியில் பார்வையிட்டனர்.

41வது Saudi Agriculture Expo 2024  கண்காட்சியில் 29 நாடுகளில் இருந்து 370க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...