Saudi Agriculture Expo 2024 கண்காட்சி: தென்னைப் பொருட்களை உற்பத்தி செய்யும் 10 இலங்கை நிறுவனங்கள் பங்கேற்பு!

Date:

Saudi Agriculture Expo 2024 கண்காட்சி கடந்த 21 முதல் 24 வரை சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்தக் கண்காட்சியில் தென்னை தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்யும் 10 இலங்கை நிறுவனங்கள் முதல் தடவையாக பங்குபற்றின.

இதன்போது ‘கண்காட்சியில்10 இலங்கை நிறுவனங்களின் முதல் பங்கேற்பை ஏற்பாடு செய்து, திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தென்னைப் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் இலங்கை நிறுவனங்கள் சிறந்த வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் ஓ.எல்.அமீர் அஜ்வத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இக்கண்காட்சிக்கு, மன்னர் அப்துல் அஸீஸின்  நிர்வாகக் குழுத் தலைவரும், சவூதி அரேபியாவின் சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் அமைச்சகத்தின் துணை நிரந்தரச் செயலருமான டாக்டர். ஃபர்ஹான்,  சவூதி அரேபிய வர்த்தக சம்மேளனத்தின் துணைத் தலைவரும் சவூதி NAF குழும நிறுவனங்களின் தலைவருமான அல்ஷெய்கி மற்றும் ஃபயேஸ் அல்-ஷாஹீலி ஆகியோர் ஆகியோர் இலங்கை சார்பான கண்காட்சியில் பார்வையிட்டனர்.

41வது Saudi Agriculture Expo 2024  கண்காட்சியில் 29 நாடுகளில் இருந்து 370க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...