கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

Date:

இந்திய விமானம் ஒன்றுக்கு  கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் மத்தியில்  இன்று மூன்றாவது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, அதனைத்தொடர்ந்து உடனடியாக விமானம்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் இந்தியன் எயார்லைன்ஸ் ஆகும் மற்றும் இது வழமைபோல் இன்று மாலை 04.05 மணிக்கு தரையிறங்குவதற்காக திட்டமிடப்பட்டது. ஆனால், வெடிகுண்டு மிரட்டலால் 08 நிமிடங்களுக்கு முன்னதாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தில் 108 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் இருந்தனர். இந்தியாவின் புதுடெல்லியில் உள்ள இந்தியன் எயார்லைன்ஸ் தலைமையகம், விமானத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக ஒரு அநாமதேய தொலைபேசி அழைப்பு வந்ததை தொடர்ந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

மீட்பு நடவடிக்கை அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதைக்கு வரவழைக்கப்பட்டு  சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்

மும்பையிலிருந்து கட்டுநாயக்கா வந்த மற்ற இரண்டு விமானங்களுக்கு முன்னதாகவே, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...