கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

Date:

இந்திய விமானம் ஒன்றுக்கு  கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் மத்தியில்  இன்று மூன்றாவது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, அதனைத்தொடர்ந்து உடனடியாக விமானம்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் இந்தியன் எயார்லைன்ஸ் ஆகும் மற்றும் இது வழமைபோல் இன்று மாலை 04.05 மணிக்கு தரையிறங்குவதற்காக திட்டமிடப்பட்டது. ஆனால், வெடிகுண்டு மிரட்டலால் 08 நிமிடங்களுக்கு முன்னதாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தில் 108 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் இருந்தனர். இந்தியாவின் புதுடெல்லியில் உள்ள இந்தியன் எயார்லைன்ஸ் தலைமையகம், விமானத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக ஒரு அநாமதேய தொலைபேசி அழைப்பு வந்ததை தொடர்ந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

மீட்பு நடவடிக்கை அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதைக்கு வரவழைக்கப்பட்டு  சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்

மும்பையிலிருந்து கட்டுநாயக்கா வந்த மற்ற இரண்டு விமானங்களுக்கு முன்னதாகவே, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...