ரஞ்சனுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

Date:

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ள ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை  (30) நிராகரித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தின்  சுயேச்சைக் குழு வேட்பாளரான கே.எம். மஹிந்த சேனாநாயக்கவினால் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு பிரீதி பத்மன் சூரசேன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...