நக்‌ஷபந்தியா தரீக்காவின் ஆன்மீகத் தலைவர் இலங்கை விஜயம்

Date:

உலக நக்‌ஷபந்தியா தரீக்காவின் 41 ஆவது தலைவர் சங்கைக்குரிய மௌலானா செய்யத் ஷேக் மெஹ்மத் ஆதில் ரப்பானி அவர்கள் 5 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

நேற்று (29) இலங்கை வந்துசேர்ந்த மௌலானா அவர்கள் இன்று தெவட்டகஹ உஸ்மான் வலியுல்லாஹ் தர்கா ஷரீப் மற்றும் பள்ளிவாசலுக்கும், போர்வை தர்காவுக்கும் விஜயம் செய்தார்.

நாளை அவர் கெச்சிமலை, பேருவளை, களுத்துறை, தர்கா நகர் பிரதேசங்களுக்கு  விஜயம் செய்யவுள்ளார்.

வெள்ளிக்கிழமை தெவட்டகஹ உஸ்மான் வலியுல்லா ஜும்ஆ பள்ளிவாசலில் மௌலானாவின் குத்பா பிரசங்கம் நடைபெறவுள்ளது.

குத்புல் அக்தாப் கௌஸுல் அ லம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி மற்றும் மௌலானா ரூமி அவர்களின் வழித்தோன்றலில் உதித்த சங்கைக்குரிய மௌலானா அஸ்ஸெய்யத் ஷெய்ஹ் நாஸிம் அல் ஹக்கானி அவர்களின் புதல்வராகிய மௌலானா செய்யத் ஷேக் முஹம்மத் ஆதில் ரப்பானி அவர்களின் இலங்கைக்கான ஆறாவது விஜயம் இதுவாகும்.

இதற்கு முந்திய அன்னாரது விஜயம் கடந்த வருடம் ஒக்டோபரில் இடம்பெற்றிருந்தது. இவரது தந்தை இலங்கைக்கு 13 தடவைகள் விஜயம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...