சப்ரகமுவ தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

Date:

தீபாவளிப் பண்டிகையையிட்டு நவம்பர் 01ஆம் திகதி சப்ரகமுவ மாகாணத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பீ.ஏ.சீ.பி. பமுனு ஆரச்சி இதனை அறிவித்துள்ளார்

 

அந்த வகையில் மத்திய மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணம் ஆகிய மாகாணங்களிலுள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கே இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

 

நாளை (31) தீபாவளி தினம் கொண்டாடப்படுவதோடு, மறுநாள் வெள்ளிக்கிழமை (01) விடுமுறை வழங்கப்படுவதன் மூலம் இக்கொண்டாட்டத்தை வார இறுதி நாட்களுடன் இணைத்து செளகரியமாக கொண்டாட மாணவர்களுக்கு வசதியளிக்கும் வகையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த விசேட விடுமுறை தினத்துக்கு பதிலாக நவம்பர் 09 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை கல்வி நடவடிக்கையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஊவா, மத்திய மாகாண ஆளுநர்களும் இவ்வாறு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...