ஐந்து மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

Date:

இலங்கையின் ஐந்து மாகாணங்களிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கு நாளை (01) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறித்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கிழக்கு, மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்குவதற்கு அந்தந்த மாகாணங்களுக்கான கல்வி அமைச்சுகள்  தீர்மானித்துள்ளன.

இன்றைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நாளைய தினம் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த நாளுக்கான கல்விச் செயற்பாடுகளை எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி (சனிக்கிழமை) முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...