வினாத்தாள்கள் கசிவதை தடுக்க வினாத்தாள் வங்கி

Date:

பரீட்சைகளின் போது வினாத்தாள்கள், உரிய காலத்திற்கு முன்பே வெளியாவதை  தடுக்கும்  வகையில், விடைத்தாள் வங்கியொன்றை ஸ்தாபிப்பதற்கான புதிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டிற்குள்  இந்த வங்கியை ஸ்தாபிக்க முடியும் என்றும்.  இதன் மூலம் விடைத்தாள்கள் உரிய காலத்துக்கு முன்பே வெளியிடுதலை தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்புதிய வேலைத் திட்டத்தின் கீழ், வினாத்தாள் தயாரிப்பு நடவடிக்கைகள் நபர்களின் கைகளுக்கு செல்லாமல், கணினி மூலம் மேற்கொள்ளப்பட்டு பரீட்சை விடைத்தாள்கள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பரீட்சைகள் நடைபெறுவதற்கு முன்பே, பரீட்சை வினாத்தாள்கள் வெளிவரும் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.

நபர்களிடம் வைக்கப்படும் நம்பிக்கை காரணமாகவே இத்தகைய தவறுகள் இடம் பெறுகின்றன. எனினும் எந்த வகையிலும் அது பரீட்சை முறையில் காணப்படும் சிக்கல்கள் அல்ல என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

 

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை, கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடைபெறும் போது, பரீட்சை வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னரே வெளியாகும் பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன.
இந்த சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேவையான தொழில்நுட்பம் தற்போது கைவசம் உள்ளது. இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வினாத்தாள் வங்கி ஒன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...