தேர்தல் தினத்தன்று ஞானசார தேரருக்கான இறுதி தீர்ப்பு வழங்கப்படுமா?

Date:

இஸ்­லாத்தை அவ­ம­தித்­த குற்றச்சாட்டின் கீழ் பொது­பல சேனா அமைப்பின் தலைவர் கல­கொட‌ அத்தே ஞான­சார தேரருக்கு எதி­ராக கொழும்பு குற்­றத்­த­டுப்பு பிரி­வினால் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை ஒத்­தி­வைக்­கப்­படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

குறித்த தீர்ப்பு நாளை நவம்பர் 14ஆம் திகதி வழங்­கு­வ­தாக‌ கொழும்பு மேல­திக நீதவான் பசன் அம­ர­சேன கடந்த செப்­டம்பர் 26 ஆம் திகதி அறி­வித்திருந்தார்.

எனினும் நாளை 14 ஆம் திகதி தேர்தல் தினம் என்­பதால், நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அள­வி­லேயே இடம்­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

ஏற்­க­னவே நாளைய தினம் 14 ஆம் திக­திக்­கு­ரிய வழக்­கு­களை பிறி­தொரு தினத்­துக்கு மாற்றி உயர் மற்றும் மேன் முறை­யீட்டு நீதி­மன்­றங்கள் அறி­வித்தல் அனுப்­பி­யுள்ள நிலையில் மேல் மற்றும் நீதிவான் நீதி­மன்­றங்­க­ளிலும் பெரும்­பாலும் அதே நடை­முறை பின்­பற்­றப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் உள்­ளன. எனினும் அது குறித்த உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு வெளி­வ­ர­வில்லை.

எனவே பெரும்­பாலும் 14 ஆம் திகதி பதில் கட­மை­களை முன்­னெ­டுக்க பதில் நீதிவான் ஒரு­வரே கட­மை­களில் இருப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் உள்­ளதால், ஞான­சார தேர­ருக்கு எதி­ரான வழக்கின் தீர்ப்பு இன்­னு­மொரு தினத்­துக்கு ஒத்தி வைக்­கப்­ப­டலாம் என தெரி­கின்­றது.

‘இஸ்லாம் ஒரு புற்றுநோய்’ என ஞான­சாரதேரர் வெளி­யிட்ட கருத்­துக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் பொரளை ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் ரிகாஸ் முன்­வைத்த முறைப்­பாட்­டுக்கு அமைய கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் மேல­திக நீதிவான் (3 ஆம் இலக்க அறை) முன்­னி­லையில் வழக்குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த வழக்கில் சாட்சி விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்டு, முறைப்­பாட்­டாளர் தரப்பின் சாட்­சி­யாளர் உள்­ளிட்ட சாட்­சி­யா­ளர்கள் நீதி­மன்றில் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளனர்.

இவ்­வா­றான நிலையில், குறித்த வழக்கை சுமு­க­மாக முடித்­துக்­கொள்ளும் நோக்கில் தனது சேவை பெறுநர் நீதி­மன்றில் பகி­ரங்க மன்­னிப்பு கோர தயா­ராக இருப்­ப­தாக ஞான­சார தேரரின் சட்­டத்­த­ர­ணிகள் நீதி­மன்­றுக்கு அறி­வித்­தி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது.

source:vidivelli

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...