தேர்தல் தினத்தன்று ஞானசார தேரருக்கான இறுதி தீர்ப்பு வழங்கப்படுமா?

Date:

இஸ்­லாத்தை அவ­ம­தித்­த குற்றச்சாட்டின் கீழ் பொது­பல சேனா அமைப்பின் தலைவர் கல­கொட‌ அத்தே ஞான­சார தேரருக்கு எதி­ராக கொழும்பு குற்­றத்­த­டுப்பு பிரி­வினால் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை ஒத்­தி­வைக்­கப்­படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

குறித்த தீர்ப்பு நாளை நவம்பர் 14ஆம் திகதி வழங்­கு­வ­தாக‌ கொழும்பு மேல­திக நீதவான் பசன் அம­ர­சேன கடந்த செப்­டம்பர் 26 ஆம் திகதி அறி­வித்திருந்தார்.

எனினும் நாளை 14 ஆம் திகதி தேர்தல் தினம் என்­பதால், நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அள­வி­லேயே இடம்­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

ஏற்­க­னவே நாளைய தினம் 14 ஆம் திக­திக்­கு­ரிய வழக்­கு­களை பிறி­தொரு தினத்­துக்கு மாற்றி உயர் மற்றும் மேன் முறை­யீட்டு நீதி­மன்­றங்கள் அறி­வித்தல் அனுப்­பி­யுள்ள நிலையில் மேல் மற்றும் நீதிவான் நீதி­மன்­றங்­க­ளிலும் பெரும்­பாலும் அதே நடை­முறை பின்­பற்­றப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் உள்­ளன. எனினும் அது குறித்த உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு வெளி­வ­ர­வில்லை.

எனவே பெரும்­பாலும் 14 ஆம் திகதி பதில் கட­மை­களை முன்­னெ­டுக்க பதில் நீதிவான் ஒரு­வரே கட­மை­களில் இருப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் உள்­ளதால், ஞான­சார தேர­ருக்கு எதி­ரான வழக்கின் தீர்ப்பு இன்­னு­மொரு தினத்­துக்கு ஒத்தி வைக்­கப்­ப­டலாம் என தெரி­கின்­றது.

‘இஸ்லாம் ஒரு புற்றுநோய்’ என ஞான­சாரதேரர் வெளி­யிட்ட கருத்­துக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் பொரளை ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் ரிகாஸ் முன்­வைத்த முறைப்­பாட்­டுக்கு அமைய கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் மேல­திக நீதிவான் (3 ஆம் இலக்க அறை) முன்­னி­லையில் வழக்குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த வழக்கில் சாட்சி விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்டு, முறைப்­பாட்­டாளர் தரப்பின் சாட்­சி­யாளர் உள்­ளிட்ட சாட்­சி­யா­ளர்கள் நீதி­மன்றில் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளனர்.

இவ்­வா­றான நிலையில், குறித்த வழக்கை சுமு­க­மாக முடித்­துக்­கொள்ளும் நோக்கில் தனது சேவை பெறுநர் நீதி­மன்றில் பகி­ரங்க மன்­னிப்பு கோர தயா­ராக இருப்­ப­தாக ஞான­சார தேரரின் சட்­டத்­த­ர­ணிகள் நீதி­மன்­றுக்கு அறி­வித்­தி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது.

source:vidivelli

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...