மலேசிய முதலீட்டாளர்களை நாட்டுக்குப் பெற்றுத் தருவதே SLAMP இன் நோக்கம்: தலைவர் இஸ்மத் ரம்ஸி

Date:

மலேசிய முதலீட்டாளர்களை (FDI) நாட்டுக்குள் ஈர்த்துத் தருவது, கல்வியியலாளர்களையும் கல்வி நிறுவனங்களையும் பலப்படுத்துவது, தூதரக உறவுகளைப் பலப்படுத்துவது என்ற நோக்கங்களிலேயே இலங்கை முஸ்லிம் தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிக சங்கம் ( Sri Lankan Muslim Professionals and Business Association – SLAMP) உருவாக்கப்பட்டதாக அதனுடைய ஸ்தாபகத் தலைவர் கலாநிதி இஸ்மத் ரம்ஸி தெரிவித்தார்.

இந்த நோக்கங்களின் அடிப்படையில் ஒரு வருட காலம் செயற்பட்டதன் பின்னர் இந்தச் சங்கம் உருவாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மலேசியாவில் வசிக்கும் இலங்கை கல்வியியலாளர்கள், தொழில்வாண்மையாளர்கள், தொழில் முயற்சியாளர்கள் பலரும் இந்தச் சங்கத்தில் இணைந்திருக்கின்றனர்.

மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் இணைந்து இதனுடைய பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மலேசியாவுக்கு வரும் இலங்கையர்களின் நலன் தொடர்பில் ஈடுபடுவதும் இந்த சங்கத்தின் பணியாகும். இந்தத் தொடரில் தற்போது மலேசியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள 19 வயதின் கீழான இலங்கை மகளிர் அணியையும் இந்தச் சங்கம் தொடர்பு கொண்டதாகவும் சங்கத்தின் தலைவர் கலாநிதி இஸ்மத் ரம்ஸி தெரிவித்தார்.

 

 

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவனுமான ஷிரான் பாசிக்கின்...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு...

ஜனாதிபதியை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா: முஸ்லிம் சமூகத்தின் 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்...