மலேசிய முதலீட்டாளர்களை நாட்டுக்குப் பெற்றுத் தருவதே SLAMP இன் நோக்கம்: தலைவர் இஸ்மத் ரம்ஸி

Date:

மலேசிய முதலீட்டாளர்களை (FDI) நாட்டுக்குள் ஈர்த்துத் தருவது, கல்வியியலாளர்களையும் கல்வி நிறுவனங்களையும் பலப்படுத்துவது, தூதரக உறவுகளைப் பலப்படுத்துவது என்ற நோக்கங்களிலேயே இலங்கை முஸ்லிம் தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிக சங்கம் ( Sri Lankan Muslim Professionals and Business Association – SLAMP) உருவாக்கப்பட்டதாக அதனுடைய ஸ்தாபகத் தலைவர் கலாநிதி இஸ்மத் ரம்ஸி தெரிவித்தார்.

இந்த நோக்கங்களின் அடிப்படையில் ஒரு வருட காலம் செயற்பட்டதன் பின்னர் இந்தச் சங்கம் உருவாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மலேசியாவில் வசிக்கும் இலங்கை கல்வியியலாளர்கள், தொழில்வாண்மையாளர்கள், தொழில் முயற்சியாளர்கள் பலரும் இந்தச் சங்கத்தில் இணைந்திருக்கின்றனர்.

மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் இணைந்து இதனுடைய பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மலேசியாவுக்கு வரும் இலங்கையர்களின் நலன் தொடர்பில் ஈடுபடுவதும் இந்த சங்கத்தின் பணியாகும். இந்தத் தொடரில் தற்போது மலேசியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள 19 வயதின் கீழான இலங்கை மகளிர் அணியையும் இந்தச் சங்கம் தொடர்பு கொண்டதாகவும் சங்கத்தின் தலைவர் கலாநிதி இஸ்மத் ரம்ஸி தெரிவித்தார்.

 

 

Popular

More like this
Related

மீள்பரிசீலனைக் குழுவை HIGHJACK  பண்ணிய அபூஹிந்த்: ‘Framework ஐ நாங்கள் தயாரிக்கவில்லை’ கைவிரிக்கும் அர்க்கம் நூராமித்

அபூ அய்மன்  பின்னணி பல நூற்றாண்டு காலமாக தேசப்பற்றுடனும், இன நல்லிக்க பணிகளை முதன்மைப்படுத்தி...

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது!

10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள்...

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து...