டெர்மினேட்டர் எனும் இஸ்ரேலிய படை வீரர் இலங்கையில்: பெல்ஜியத்திலிருந்து தகவல்!

Date:

பலஸ்தீனர் ஒருவரைக்கொன்று அவரது உடலை இழிவாக நடத்தியதற்கு பொறுப்பனவராகக் கருதப்படுகின்ற கல் பெரேன் புக் எனும் இஸ்ரேலிய படைவீரர் கொழும்பு வந்திருப்பதாக பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட ஹித் ரஜப் பவுண்டேஷன் எனும் அரச சார்பற்ற நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

டெர்மினேட்டர் என்று அழைக்கப்படும் இந்த படை வீரரை கைது செய்து சர்வதேச கிரிமினல் நீதிமன்றுக்கு ஒத்துழைக்குமாறு இலங்கை அதிகார பீடங்களை அது அறிவுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐசிசிக்கு முறையிட்டதாகவும், சர்வதேச ரெட் நோட்டீஸ் விடுக்குமாறு இன்டர்போலுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அது தெரிவிக்கிறது.

ஒகஸ்ட் 9 2024 இல் பலஸ்தீனர் ஒருவரைக்கொன்று அதனை வெற்றியின் சின்னமாக தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டிருந்தார்.

இது சர்வதேச மனித உரிமை சட்டத்தில் இறந்த உடல்களுக்கான கௌரவத்தை பாதிப்பதாகும். அவர் இலங்கைக்கு வந்திருப்பதை பயன்படுத்தி இலங்கை அதிகாரிகள் அவரை பொறுப்புக்கூற வைக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

 

 

 

 

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...