சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு: அமைச்சரவை அனுமதி

Date:

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான வானிலை காரணமாக வீடுகள், நெடுஞ்சாலைகள், வயல் நிலங்கள், விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதாலும், அதிகளவான தடுப்பணைகள், கால்வாய்கள் உடைந்ததாலும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.

விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் தரவுகளின்படி, 2024-12-02 ஆம் ஆண்டு நிலவரப்படி, தோராயமாக 91,300 ஏக்கர் நெற்பயிர்கள் முழுமையாகவும், 86,225 ஏக்கர் நெற்பயிர்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

மேலும், 173 சிறுபாசன வாய்க்கால்கள் முழுமையாகவும், 1,148 பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 750 ஏக்கர் மரக்கறி பயிர்கள் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெல் பயிர்ச்செய்கையில் 02 ஹெக்டேயர் வரை ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு  அதிகபட்சம் ஒரு ஏக்கருக்கு ரூ.40,000/- வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சோளம், உருளைக்கிழங்கு, மிளகாய், பெரியவெங்காயம் மற்றும் சோயாபீன் ஆகிய 01 ஹெக்டேயர் (2.5 ஏக்கர்) வரையிலான 05 வகையான பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.40,000/- நஷ்டஈடு  வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Popular

More like this
Related

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...